Friday, August 13, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

Friday, 13 August, 2010


இந்த தொடருக்குள்ள புதுசா வந்த பார்ட்டிகளுக்கு ஒரு பேச்சு. அண்ணே, நான் கண்ணனை ஏத்துக்கிடறேன். அவரு கீதை சொல்லியிருப்பாருனும் நம்பறேன். ஆனால் அவரோட பயாக்ரஃபிய வச்சு பார்க்கிறச்ச , அவர் சைக்காலஜிப்படி , இன்றைய விஞ்ஞான உண்மைகளின் படிபார்த்தா கீதைல நிறைய கலப்படம் நடந்திருக்கிறதை ஃபீல் பண்ணித்தான் இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன்.



கிஷ்டருக்கும், நமக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்குங்கண்ணா.ஆத்திரம் அவசரம்னா லைட்னிங் கால் கூட போட்டு பேசலாம். சந்துல சிந்து பாடற அவாளோட பிற்சேர்க்கைகளை வெளிச்சம் போடறதுதான் நம்ம நோக்கம். ஓம் க்லீம் க்ருஷ்ண க்லீம்



குறிப்பு:

கீதை வாசகங்கள் கண்ணதாசன் அவர்களின் மொழி பெயர்ப்பாகும்.



கடந்த அத்யாத்துல கண்ணன் சொல்றதா வர்ர //தேவர்களில் இந்திரன் நானே// ங்கற வரியை கிழிக்காம விட்டிருந்தேன்.



இந்த இந்திரனோட சைக்காலஜியே டிஃப்ரன்ட். பாவம் பயங்கர ஐ.சி பார்ட்டி. இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். பூலோகத்துல எவன் தபஸ் பண்ணாலும் அவன் இந்திர பதவியை கேட்டு நமக்கு ஆப்பு வைக்கத்தான் தபஸ் பண்றான்னு தேவ வேசிகளை அனுப்பி கிளப்பிவிட்டு இனப்பெருக்கம் பண்றதே வேலை. எந்த வீட்ல எந்த நேரத்துல புருசன் இல்லைன்னு பார்த்து ரேப்பறதில ஸ்பெஷலிஸ்ட். இன்னம் நிறைய டேட்டா இருக்கு. அதையெல்லாம் பின்னொரு சந்தர்ப்பத்துல தனிப்பதிவாவே பார்ப்போம். ( அவாள் அலறல் : அய்யய்யோ தனிப்பதிவா? - வடிவேலு மாடுலேஷன்ல படிங்க)



இந்த மாதிரி ஒரு செக்ஸ் மேனியாக், பர்வர்ட்டட் ஃபெலோ, ஐசி பார்ட்டியான இந்திரனை கோட் பண்ணி " தேவர்களில் இந்திரன் நானே"ன்னு கிஷ்டர் சொல்லியிருப்பாரா?



அடுத்த வரி // முனிவர்களில் பிருகு நானே// இந்த பிருகு முனிவர் இன்னொரு வகை செக்ஸ் வக்கிரம் பிடிச்ச மன நோயாளி, பயங்கர ஈகோயிஸ்ட். எங்கன புருசன் பொஞ்சாதி ப்ரைவேட்டா சந்தோசமா இருக்காய்ங்களோ அங்கன வேளை நாழி இல்லாம நுழைவாரு. நுழைஞ்சதும் உருவிக்கிட்டு ( அணைப்பை சொன்னேன்ங்க) இவரை கண்டுக்கிட்டு, வணக்கம் போடலைன்னா சபிச்சுருவாராம்.



பிரம்மனுக்கு கோவில் இல்லாததுக்கு,கோவில்கள்ள சிவனோட உருவத்தை பிரதிஷ்டை பண்ணாததுக்கு ஸ்ரீனிவாச அவதாரத்துக்கு இவரோட இந்த பர்வெர்சன் தான் காரணமுங்கோ.



அறிவுள்ளவன் எவனாச்சும் இந்த பார்ட்டிய தன்னோட ஒப்பிட்டுக்குவானா?



அடுத்த வரி //பேரரசன் நானே//



இன்னைக்கு மந்திரி நாளைக்கே எந்திரிங்கற ஸ்டேஜ் இருக்கிறச்சயே சனம் பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை. ராசா அதுவும் பேரரசன்னா நிலைம எப்படியிருக்கும் பாருங்க.ஆஃப்டர் ஆல் ஒரு கிருஷ்ண தேவராயர் தன் சொந்த மந்திரிக்கு கண்ணை பிடுங்க வச்சாரு தெரியும்ல. சன நாயகத்துல ஆஃப்டர் ஆல் மந்திரி, எம்.எல்.ஏவே இத்தனை ஆட்டம் போடறச்ச ராசாவுங்க எத்தீனி ஆட்டம் போட்டிருப்பாய்ங்க. கிருஷ்ணர் மாதிரி ஒரு மனிதாபிமானி வாயா வார்த்தையா கூட //பேரரசன் நானே// னு சொல்லியிருப்பாரா ஊஹூம். இதெல்லாம் அவளோட கை சரக்குதேன்.



//ஆயுதங்களில் வஜ்ரம் நானே//



கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல என்னென்னா ஆயுதம்லாம் கண்டு பிடிக்கப்போறாய்ங்கனு குத்து மதிப்பா ஒரு ஐடியா இருக்கனும்லியா. ஆயுதங்களில் நான் எதிர்காலத்தில் கண்டிபிடிக்கப்பட உள்ள அணு குண்டுன்னு சொல்லியிருக்கனும்லியா. சொல்லலியே அதனாலத்தான் சொல்றேன். இப்போ செலவாணில இருக்கிற கீதைய சொன்னது கண்ணனில்லே. எழுதி விட்டது ஒரு பஞ்ச கச்சம்னு.





//தீய விஷ நாகங்களில் அனந்தன் நானே//

கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல என்னென்னா விசங்கள் எல்லாம் வரப்போவுதுன்னு குத்து மதிப்பா ஒரு ஐடியா இருக்கனும்லியா. விசங்களில் நான் எதிர்காலத்தில் கண்டிபிடிக்கப்பட உள்ள சயனைடுன்னு சொல்லியிருக்கனும்லியா.



//பாய்ந்துவரும் ஆறுகளில் கங்கை நானே//

உலகத்துல பெரிய ஆறு எதுன்னு கூகுல் சர்ச் இஞ்சின்ல அடிச்சு தேடினா தான் தெரியும்னா நீங்க நானுல்லாம் மனிதன். அப்படியே தெரிஞ்சாதான் மாதவன்.

உலகத்துல பெரிய ஆறு எதுங்கற பாயிண்ட் கூட கரெக்டா இல்லே.இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய எப்படிங்கண்ணா நம்பறது? அதை சொன்னது கண்ணந்தானு எப்படிங்கண்ணா ஏத்துக்கிறது.



கங்கையே நாறிப்போச்சுன்னு சுத்திகரிப்பு வேலை பல காலமா நடந்துட்டிருக்கு.

கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல கங்கை நாறிப்போயிரும்னு தெரியாதா? தெரியாமத்தான் ஆறுகளில் கங்கைன்னிருக்காரா?



//ஐவரிலே தனஞ்சயனும் நானே//



இந்த ஐவர் யாருன்னா பாண்டவர்கள் அஞ்சு அப்பாவுக்கு பிறந்து அஞ்சு பேரும் ஒருத்தையை கட்டிக்கிட்டாய்ங்களே அந்த பார்ட்டிங்க. இதுல தஞ்சயன்னா யாரு? அர்ச்சுனன். இவன் கதை தெரியுமில்லியா? ஸ்டூடெண்ட் பீரியட்லயே லெக்சரருக்கு ஜல் ஜக் போட்டு ஏகலைவனுக்கும் ,கர்ணனுக்கு ஆப்பு வச்ச பொட்டை . கிருஷ்ணர் உண்மையிலேயே கீதைய சொல்லியிருந்தா இந்த மாதிரி ஒரு கேரக்டரை தன்னோட கம்பேர் பண்ணியிருப்பாரா? நோ



//ஈடில்லாத அறிவினிலே சுக்கிராச்சாரி நானே//

இந்த சுக்கிராச்சாரி கேரக்டர் எப்படிப்பட்டதோ அடுத்த பதிவுல பார்ப்போம்.