Sunday, August 22, 2010

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி

அண்ணே வணக்கம்ணே,
கிருஷ்ணருக்கும் நமக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதால தில்லு துரை கணக்கா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினல் கிடையாது. இதுல அவாள் கைவரிசை இருக்கு. ஏன்னா சர்வக்னரான கிருஷ்ணர்  ஸ்டேட்மென்ட் தர்ரச்ச சில்லியான  மிஸ்டேக் எல்லாம் பண்ணமாட்டாரு. அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் கன்டென்ட் எல்லாம் அவர் வாய்லருந்து வர வாய்ப்பே இல்லைன்னு இந்த தொடர் முழுக்க எழுதிக்கிட்டு வர்ரேன். ஒரே ஒரு ஸ்மார்ட் மட்டும்  ...பேர்ல மட்டும் ஸ்மார்ட்டை வச்சிக்கிட்டு துள்ளி குதிச்சு துவண்டு பொயிருச்சே தவிர தர்ம பூமி,கர்ம பூமின்னு புகழப்படற பாரத  நாட்ல என் வாதங்களை தர்க பூர்வமா கண்டிச்சு  ஒரு பதிவு கூட வெளியாகல. இருந்தாலும் நம்ம வேலைய நாம விட்டுர முடியாதில்லையா.

கடந்த பதிவுல கிருஷ்ணர் நான் புலி, நான் சிங்கம்னு செல்ஃப் டப்பா அடிச்சுக்கிறத பார்த்தோம். அவர் செலக்ட் பண்ணி  தன்னோட ஒப்பிட்டுக்கிட்டதெல்லாம் எந்த அளவுக்கு இன்ஃபிரியர்னு பார்த்தோம்.

இப்போ  விஸ்வ ரூப கட்டத்துக்கு வந்துட்டம். என்னதான் பம்ப் அடிச்சாலும் அர்ச்சுனன் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரி இருக்கவே கிருஷ்ணர் அவனை நம்ப வைக்கிறதுக்காக விஸ்வ ரூப தரிசனம்  காட்டறாராம்.

யோக சாதனையின் டார்கெட்டே சாதகன்  தன்னை இந்த படைப்பின் பிரிக்க முடியாத பாகமா உணர்ந்துக்கறதுதான். தான் இந்த படைப்பின் மீனியேச்சர் ( ஃபோன்சாய்க் மாதிரி) னிட்டு அனுபவபூர்வமா புரிஞ்சிக்கிறதுதான்.  அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறதை எக்ஸ்பீரியன்ஸ் ஆறதுதான் லட்சியம்.

நேத்து லோக்கல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , நம்ம லோக்கல் பத்திரிக்கைக்கு இலவச இணைப்பா (பேப்பரே இலவசம் தான் தலை !)   ஸ்ரீகிருஷ்ணரோ 108 நாமங்களை பாக்கெட் புக்கா போட்டுக்கொடுக்க ஒரு ஸ்பான்சரரை பிடிச்சேன். மேற்படி நாமங்களை தெலுங்குல அடிச்சேன். கிருஷ்ணர்னா கில்மா பார்ட்டின்னு ஒரு இமேஜ் எப்படி வந்ததோ தெரியலை. அவருடைய 108 நாமங்கள்ள ஒன்னு யோகேஸ்வராய நம:

யோகேஸ்வரனான கண்ணன் உண்மையிலயே அர்ச்சுனனுக்கு ஞானத்தை கொடுக்கனும்னா அவனோட உடல்ல ( அர்ச்சுனனோட உடல்ல) அண்ட சரா சர பிரபஞ்சங்களும் உள்ளடங்கி  இருக்கிறதை காட்டியிருக்கனும்.

பாரு ராசா !  நீ இந்த படைப்புல ஒரு பாகம். பாகம் என்ன சில்லியா... இந்த படைப்பே நீதான். என்ன.. படைப்பு கொஞ் .....சம் பெருசா இருக்கு. நீ கொஞ்சம் சிறுசா இருக்கே.   நல்லா பார்த்துக்கனு  அர்ச்சுனன் உடல்ல படைப்பு அடங்கியிருக்கிறதை த்ரீ டி எஃபெக்ட்ல ,  டி.டி.எஸ் துல்லியத்தோட  காட்டியிருக்கனும் காட்டியிருக்கனும்.

சரி ஓஞ்சு போவட்டும் திடீர்னு அந்த அனுபவத்தை அர்ச்சுனனுக்கு கொடுத்தா 6 வோல்ட் சீரியல்  பல்புல  250 வோல்ட் கரண்ட் பாஸானப்ல அவன் பஸ்மமாயிருவானு நினைச்சுருந்தா தனக்குள்ளே அண்ட சராசர பிரபஞ்சங்கள் அடங்கியிருப்பதை காட்டி  பார்த்தயா இதே தான் உன் பாடிலயும். இப்போ இதையெல்லாம் உனக்குள்ள  காட்டவும் நான் ரெடி .. ஆனா உன் பாடி ரெடியில்லைனு எஜுகேட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு விட்டலாச்சார்யா படத்துல எஸ்.வி.ரங்காராவ் மாதிரி மாஃப் காட்டறார்.


சரி ஓஞ்சு போவட்டும். அதை பார்க்கிற அர்ச்சுனன் தப்பு தப்பா வர்ணிக்கிறான். அதையெல்லாம் கேட்டுக்கிட்டு புராண படத்துல கிருஷ்ணர் வேஷம் போட்ட என்.டி.ஆர் மாதிரி அபய ஹஸ்தத்தை காட்டிக்கிட்டு நிக்கிறார்.

அர்ச்சுனன் சொல்றதை பாருங்க

//கதிரும் மதியும்  கண்களாய் பெற்றாய்//

(To be cont. in Next post