Thursday, April 1, 2010

அடுத்த விக்கட் நாராயணி பீடம் ?


இது ஜாதகபலனில்லே. வெறுமனே குட்டிசைத்தானை வச்சிக்கிட்டு ஃபிலிம் காட்டற பார்ட்டி இதுனு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டதால பக்காவா சொல்றேன்.


இன்னைக்கு இந்த பதிவுல திருமலைக்கோடி சாமியாரு, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரு அக்பரு கவுசருன்னு கிழி கிழின்னு கிழிச்சிருக்கேன். சொல்லவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. சந்தர்ப்பம் வரப்போ எடுத்துவிடறேன்.

பை தி பை "உனக்கு 22 எனக்கு 32" தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் தனியா போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க. உங்க கருத்த தவறாம தெரியப்படுத்துங்க. பெரிசா ஒன்னும் எழுதவேணாம். தூள் ! பரவால்ல கண்ணா ! மொக்கை பண்ணிட்டயேனு ரத்தின சுருக்கமா போட்டா கூட ஒரு ஐடியா வந்துரும்


ஸ்வாமி நித்யானந்தா ( நைட் கிளப்புல ஜீனும்,டீ ஷர்ட்டுமா குட்டிகளோட கெட்ட ஆட்டம் போட்டாரே அதே பார்ட்டிதான்.. கரெக்ட் நடிகை ரஞ்சிதா கூட அஜால் குஜால் வேலை பண்ணி வசமா மாட்டிக்கிட்டு சுஜாதாவோட ஓடாதே நாவல் மாதிரி ஓடிக்கிட்டே இருக்காரே அதே நித்யாங்க - இன்னுமென்ன ஆனந்தா கீனந்தான்னிக்கிட்டு)
சமாச்சாரம் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டிருந்தப்ப ஆமாங்க நீங்கதான் தில்லு துரையாச்சே திருமலைக்கோடி நாராயணி பீடம் ஓம்சக்தி அம்மாவை பத்தி எழுதக்கூடாதானு நிறைய பேர் உசுப்பி விட்டாய்ங்க.. ஆனாலும் வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோனு எழுத முடியாதே. ஓம்சக்தி அம்மாவோட டேட் ஆஃப் பர்த் இருக்கு. வெறுமனே நியூமராலஜிலயே தாளிச்சுரலாமா? இல்லே பக்த கோடிகள் யாராவது அம்மாவோட டைம் ஆஃப் பர்த் குடுக்கிறாங்களா பார்ப்போம்.

ஜூவில சில வருஷங்களுக்கு முன்னாடி விடுதலைப்புலிகளோட பணமெல்லாம் ஆயுத கம்பெனிகளூக்கு இங்கிருந்துதான் ட்ரான்ஸ்ஃபர் ஆறதா ஒரு ஐட்டம் போட்டாங்க .உங்களுக்கும் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த சாமியார் படங்க பண்றதெல்லாம் ஜஸ்ட் அஞ்சு வேலைதான் போல.

1.ஆரூடம் சொல்றது:
இதை எப்படி பக்காவா சொல்றேன்னா. சவுண்ட் பார்ட்டியா இருக்கிற ஓம் சக்தி பக்தர்கள் எல்லாம் தங்கள் வீட்டு கல்யாணத்துக்கு பங்காரு அடிகளார் கிட்டே உத்தரவு (?) வாங்கறது சகஜம் .அப்பா அம்மால யாரோ ஒருத்தரு நம்ம க்ளையண்டா இருந்தா ஜாதகத்தை தூக்கிக்கிட்டு முகூர்த்தம் வச்சிக்க நம்ம கிட்டயும் வருவாங்க. நானெல்லாம் சொந்தமா முகூர்த்தம் வைக்கிற அளவுக்கெல்லாம் புலி கிடையாது. ஏதோ தாராபலம் . கல்யாணமாற மாசத்துலயாவது குரு,சுக்கிரபலம் இருக்கிற மாதிரி ரெடி மேட் முகூர்த்தம் பார்த்து வச்சி தர்ரது வழக்கம். நாம வைக்கிற முகூர்த்தமும் பங்காரு அடிகளார் வச்ச முகூர்த்தமும் அப்படியே பச்சக்குனு டேலி ஆகும். இது எப்படி பாசிபிளாகுது. ஒன்னு நானும் ஓம்சக்தி அருள் பெற்றவனா இருக்கனும். இல்லன்னா பங்காரு அடிகளார் வீட்லருந்து வரும்போதே பஞ்சாங்கம் பார்த்து முகூர்த்தத்தை ஞா வச்சிக்கிட்டு வந்திருக்கனும். முன்னதுக்கு சாத்தியமே இல்லை. ஓம் சக்தியோட அருள் மட்டும் சம்பூர்ணமா இருந்திருந்தா தாளி .. நித்யானந்தா மாதிரி ஆளுக்கெல்லாம் பப்ளிக்ல அறுந்து விழறாப்ல செய்திருப்பேன். ஸோ பின்னதுக்குதான் சான்சு அதிகம்

2. சவுண்ட் பார்ட்டிங்களுக்கு குட்டிகளை ஏற்பாடு பண்றது

3.பதவி வெறியர்களுக்கு யாகங்கள் நடத்தி கொடுக்கறது
4. தன் பக்தர்களான தொழிலதிபர்கள்,அரசியல் வாதிகளுக்கிடையே புரோக்கர் வேலை. பைரவி மூலமா அரசாங்க வேலைகளை முடிச்சு தர்ரது
5.சட்ட விரோத க்ரூப்ஸுக்கு ஷெல்டர், போதை மருந்து கடத்தல், சப்ளை,வருமான வரி ஏய்ப்புக்கு பண்ண உதவுறது.

இதுல நாராயணி பீடத்துக்கு ஏதும் விதிவிலக்கு இருக்கும்னு நான் நினைக்கல.
உண்மையான சாமிக்கு மீடியா வெளிச்சம் தேவையில்லை. அதுவும் லட்சம் லட்சமா கொட்டி வண்ண விளம்பரங்கள் தேவையில்லை.

ஆன்மீகத்தை வியாபாரமாக்கி முதல் வச்ச பார்ட்டி லாபம் ஈட்டாதுனு கியாரண்டியே இல்லை. தங்க கோவில் கான்செப்ட் வடிகட்டின சேடிசம். தலா வெறும் 5 சவரன் நகையிருந்தா போதும் கு.ப மக்கள் தொகைல பாதியா இருக்கிற பெண்கள்ள பாதி பேருக்கு கல்யாணமாகி ஒழுங்கா குப்பை கொட்டுவாங்க. இது நாட்டு நிலைமை. இந்த நாட்டுல தங்க கோவில் கட்டறவனை சேடிஸ்டுன்னு சொல்லாம வேற என்னான்னு சொல்றது.

ஆசிரமத்துல மூத்திரம் பெய்யறதுக்கு முதற்கொண்டு கட்டணம் ( உபரி தகவல்: மேல் மருவத்தூருக்கு லேட்டஸ்டா உகாதிக்கு போய் வந்தவங்க சொன்னபடி உச்சா போறதுக்கு ரூ.3 கட்டணம்) உண்மையான ஆன்மீகத்தை வளர்க்க ஆசிரமம் நடத்த தேவையில்லே. கண்டதுக்கும் டோக்கன்,டிக்கட் தேவையில்லே. முக்கியமா அரசியல் தலைவர்களோட அறிமுகம் தேவையே இல்லை. மனைவிய மேயராக்க தேவையில்லை.

( பங்காரு அடிகளாரோட மனைவி மேயரானதால பர்சன்டேஜ் இல்லாம காண்ட் ராக்ட் கிடைக்குதா? சம் திங்க் இல்லாம பில் பாஸ் ஆகுதா?)

திருமலைக்கோடில இன்னும் ஒரு படி முன்னால போய் சாமியார் படம் ப்ரிண்ட் பண்ணி டீ ஷர்ட்டெல்லாம் விக்கிறாய்ங்களாம்.. பிரபு தேவா பாட்டு ஒன்னு வருமே" குண்டு மல்லி ஒத்தரூபா.. உன் தலைல வச்சா நூறு ரூபா"ங்கற மாதிரி சாமியார் படம் ப்ரிண்ட் ஆனதுமே டீஷர்ட் விலை எகிறிக்கும்.

பார்ட்டி ஆஃபீஸ் முன்னாடி தலைவர்/தலைவி படம் போட்ட பேட்ஜ் விக்கிறவனுக்கும் இவிகளுக்கும் என்ன ராசா வித்யாசம்?

இந்த உகாதி தொடர்பா மேல் மருவத்தூர் போன சனம் சொன்ன ஒரு தகவல். தொண்டு செய்யறவங்க போறதுக்கு (ஃப்ரீ சர்வீஸ்) தனி வழி இருக்காம். ஒரு பக்தர் விசயம் தெரியாம அந்த வழில பூந்துட்டாராம். ஒடனே அங்கே இருந்த செக்யூரிட்டி அந்த பக்தரை பிடிச்சு அடிச்சி கிழிச்சிருக்காங்க.

பதிவோட ஆரம்பத்துல திருமலைக்கோடி சாமியார் குட்டிசைத்தானை வச்சி வித்தை காட்டறாருனு சொன்னேன். அது மை ஓன் எக்ஸ்பீரியன்ஸுன்னும் சொன்னேன். அதை சொல்லிரலாம்.

நான் ஒரு லோக்கல் ஃபோர்ட் நைட்லி நடத்தறது தெரிஞ்ச விசயம். அதனோட ப்ரிண்டிங் வேலூர்லதான் நடக்கும். ஏதோ அசந்தர்ப்பமாகி வேலூர் போக லேட்டாயிருச்சு. எப்படியோ ப்ரஸ் காரரை ஃபோன்ல பிடிச்சு சி.டி.யும் காசும் கொடுத்துட்டு ராத்திரி அச்சடிச்சு, விடியல்ல பார்சலை பஸ்ஸுல போட்டுருங்கன்னிட்டு திரும்பிட்டோம்.

திருமலைக்கோடி போயிரலாம் . ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல க்யூ காம்ப்ளெக்ஸ்ல தங்கிட்டு விடியல்ல வந்து நாமே பார்சலை பிக் அப் பண்ணிக்கலாமே"ன்னு கூட வந்த நண்பர் ஐடியா கொடுத்தார்.

த பாருப்பா நீ விடிஞ்சதும் நான் சாமியார் வேட்டிக்குள்ள பூந்துட்டு தான் வருவேன்னா நான் ஒத்துக்கிட மாட்டேன். அப்படி ஏதாவது ஐடியா இருந்தா இப்பவே சொல்லிருன்னேன்.

நண்பர் " தூ தூ அதெல்லாம் ஒன்னுமில்லேன்னிட்டார். திருமலைக்கோடி கிளம்பினோம்.

மெயின் கேட்டை தாண்டினோம். செக்யூரிட்டிக்கு பதில் சொல்லிட்டு க்யூ காம்ப்ளெக்ஸ் உள்ளாற அடி எடுத்து வைக்கிறேன். அதுக்குள்ள என்னென்னவோ ஆயிருச்சு.

இங்கே ஒரு சின்ன க்ளேரிஃபிகேஷன் தரனும். நான் 1984 ல இருந்து 1986 வரை வாழ்ந்த வாழ்க்கை வேற. அதுக்கப்புறம் வாழ்ந்த வாழ்க்கை வேற. அப்பப்போ பித்து பிடிச்சு மந்திரம், மாந்திரீகம், யந்த்ரம், கர்ண பிசாசு, குட்டி சைத்தான் அது இதுனு டைவர்ட் ஆனாலும், ஆஞ்சனேயரை, அவருக்கு ரொம்ப பிடிக்குங்கறதுக்காக ராம நாம ஜபத்தை மட்டும் விட்டதே இல்லை.

விவேகானந்தர் ஒரு இடத்துல சொல்றார் . நீ ஒரே விஷயத்தை 14 வருசம் சொன்னா அந்த வார்த்தைக்கு தெய்வீக சக்தி வந்துரும்.

மேலும் நான் பழகின மந்திரவாதிகள் எல்லாருக்குமே ஆஞ்சனேயருன்னா டர்ருதான்.
ஏண்டான்னா இவரோட சக்தி மட்டும் கொஞ்சம் வெரைட்டியான சக்தியாம். இவரோட அருள் இருக்கிற இடத்துல வேற ஏதாவது துஷ்ட சக்தி என்டரானா தன் பக்தனை அந்த இடத்தை விட்டு விலகச்செய்ய முயற்சிக்குமாம்.

அந்த பக்தன் அந்த இடத்தை விட்டு விலகலன்னா இவரோட சக்தி அந்த துஷ்ட சக்தியோட மிங்கில் ஆயி, அந்த சக்தியையும் தன் சக்தியா மாத்திக்கிட்டு ஒரு உதை விட்டா டப்பா டான்ஸாடிருமாம்.

தீவினை செய்யறவங்க போடற முதல் கண்டிஷன் தாங்கள் தீவினை செய்யபோற வீட்ல ஆஞ்சனேயர் படம், ராம நாம ஜபம் எதுவும் இருக்ககூடாதுங்கறதுதான்.

இன்னொரு க்ளேரிஃபிகேஷனும் கொடுக்கனும். சாப்பாட்டை மென்னு சாப்பிடாம மலைப்பாம்பு மாதிரி விழுங்கிர்ரது, கவுண்ட்லெஸ் டீ, சிகரட், ராத்திரியெல்லாம் கண் முழிச்சு வேலை செய்யறது இத்யாதி காரணங்களால் நமக்கு இருக்கிற ஒரே சிக்கல் மலச்சிக்கல் தான். ஒவ்வொரு நாளும் ஒரு லிட்டர் உப்பு தண்ணிய உள்ளே அனுப்பலன்னா மஷ்டு வெளிய வராது. மஷ்டு வெளிய வராம இந்த சாமி7867 வீட்டை விட்டு வெளிய வராது.

இப்போ சீனுக்கு வரேன். க்யூ காம்ப்ளெக்ஸுக்குள்ள அடி வைக்கிறேன். திடீர்னு வேத்து விடுது. அதுவும் எப்படி ஜீன்ஸ் பேண்ட் கூட நனைஞ்சு போகுது. ஒரே நேரத்துல வாமிட்டிங் சென்ஸேஷன். லூஸ் மோஷன் ஆயிர்ராப்ல ஃபீலிங். ஒரு பத்து நிமிஷம் ஆடிப்போயிட்டேன். ஃப்ரெண்டும் டென்ஷனாயிட்டான். இந்த 43 வயசுக்கு மனித பிறவிகளுக்கு சகஜமா வர்ர நோய்ங்கள கூட நெனச்சி பார்க்காத ஜென்மம் இப்படி துடிச்சா அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?

நமக்கு தெரிஞ்ச வித்தையெல்லாம் காட்டறேன். ராம நாமம் சொல்றேன் பெப்பே. ராமரோட மூல மந்திரம் சொல்றேன் பெப்பே. படக்குனு மாத்தி யோசிச்சு கழுத்துல இருந்த ஆஞ்சனேயர் டாலரை கழட்டி ஃப்ரெண்ட் கிட்டே கொடுத்துட்டு குட்டிச்சாத்தானுக்கு சம்பந்தப்பட்ட பிரயோகத்தை எடுத்து விடறேன். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துல ரிலீஃப். எப்படா விடியும்னு இருந்து துண்டை காணோம் துணிய காணோம்னு பிச்சிக்கிட்டு வேலூர் வந்துட்டம்.

ஆஞ்சனேயரோட சக்தி தன் வேலைய காட்டிருச்சு. அடுத்த ஜூவி இதழ்ல தான் நாராயணி பீடத்தோட வண்டவாளம் தண்டவாளத்துல ஏறிருச்சு.

இந்த குட்டிசைத்தான், கர்ண பிசாசெல்லாம் செகரட் ரியேட்ல அட்டெண்டர் மாதிரி. அம்பது நூறுக்கே நாய் குட்டி மாதிரி பின்னே வரும். இதெல்லாம் டுபுக்கு வேலை. பெட் ரோல் தீர்ந்து போனப்ப வண்டிய சாச்சு கிக்கர் அடிக்கிற மாதிரி.

ஒரு நாள் அட்டெண்டருக்கு அழுத்தலன்னா ஃபைலே காணாம போயிரும். படக்குனு கை விட்டுரும். இதெல்லாம் உள்ளாற இருக்கிற தெய்வத்துக்கு கார்ட்டூன் பார்த்த மாதிரி. இதெல்லாமே தன் மேல அழுத்தத்தை குறைச்சுக்க அந்த தெய்வமே பண்ண ஏற்பாடு.

நெல் மூட்டைய எலிகள் துவம்சம் பண்ணாம இருக்க வெல்ல பொறிய இறைச்சு வப்பாங்களே அந்த மாதிரி.

உலக அழகி பெட் ரூம்ல வெயிட் பண்ணும்போது எவனாச்சும் சுய இன்பம் அனுபவிச்சா அவனை என்னன்னு சொல்றது?

அளப்பரிய கருணையோட கடவுள் காத்திருக்க இந்த டாஃபர் பசங்களை சுத்தி வர்ரவுகளை என்னன்னு சொல்றது.

போலி டாக்டருக்கு உதவிய கலைஞர்
வாணியம்பாடி காசினி டாக்டர் அக்பர் கவுசரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதான் பணத்தை அள்ளி வீசி தனியார் சேனல்ஸ்ல யானை மேல ஏறிவந்து தரிசனம் கொடுத்து சுய தம்பட்டம் அடிக்கிறாரே. தேவி மாதிரி வார இதழ்கள்ள இரண்டு பக்கம் ஆப்ளிகேஷன் ஐட்டம் , ஒரு பக்கம் விளம்பரம்னு அசத்தறாரே. அதெப்படி தெரியாத இருக்கும். இவர் தெய்வீக மருத்துவம்ங்கற பேர்ல ஒரு பத்திரிக்கையும் நடத்தறாரு. பத்து வருசத்துக்கு முன்னாடி தேவி வார இதழ்ல உதவி ஆசிரியர்கள் தேவைனு ஒரு விளம்பரம் வந்தது. கல்யாணமாகி 9 வருசம் ஆகி புது (?) பெண்டாட்டி மோகமெல்லாம் தீர்ந்து போய் "பைசா மே பரமாத்மா" இருக்காருங்கற மன நிலைல இருந்த நானும் அப்ளை பண்ணேன். அவரோட மார்க்கெட்டிங்க் டெக்னிக் வெரி சிம்பிள். ரெண்டு கட்டு காசினி கீரைய எடுத்துக்கிட்டு காரை போட்டுக்கிட்டு சென்னை போயிருவாரு. அது சென்னை போ சேர்ரதுக்குள்ள வெயில்+ டீசல் சூட்டுக்கு கலைஞர் ......... மாதிரி தொங்கி போயிரும். இருந்தாலும் அதை கலைஞருக்கு கொடுத்துட்டு ஒரு கலர் படம் எடுத்துக்கிட்டு வந்துருவார். மீடியால கலைஞரோட சிரிப்பார். உபரியா அப்பப்போ மூப்பனார் எட்ஸெட்ரா.

தெய்வீக மருத்துவத்துல 9 மாதம் வரை குப்பை கொட்டினேன். அப்போ தோ தொழிற்சாலைல வேலை பார்த்த கவுசர் எப்படி தெய்வீக மருத்துவரானார். கவுசரோட மூலிகை அறிவென்ன? அவர் வெற்றிக்கு பின்னாடி இருக்கிற சதி என்ன? அவருக்கு கன் மேன் கொடுக்க காரணம் என்ன? ஒரு கன்மேன் எப்படி தன்னை தானே சுட்டுக்கிட்டு செத்தாரு. ஊருக்கெல்லாம் மூலிகை வைத்தியம் பண்ற கவுசர் தனக்கு நோய் வந்தா மட்டும் எங்கே போவார்.


இவரோட படாடோபமான விளம்பரங்களை பார்த்து வந்த நோயாளிகள் எப்படியெல்லாம் ஏமாத்தப்பட்டாங்க. நக்கீரன்ல இவரோட வண்டவாளம் ஏன் தண்டவாளம் ஏறுச்சு. இதுக்கு பின்னாடி இருக்கிற கதைஎன்ன? அப்புறம் நக்கீரன் ஏன் கவுசர் கதைய ஃபாலோ அப் பண்ணல?

கவுசர் ஆஸ்பத்திரில ஏன் எல்லா எம்ப்ளாயிசும் பெண்களாவே இருக்காங்க. இதையெல்லாம் நேர்ல பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. இதையெல்லாம் ஒரு தொடர்பதிவா போட்டா எப்படியிருக்கும்? கமெண்ட் ப்ளீஸ்.