Wednesday, February 17, 2010

சங்கராச்சாரியாரின் மொ.மா. தனம்

மதவாதிகள்,சாமியார்கள், ச(ன்)னியாசிகளின் அரசியல் ஆர்வம் எந்த காலத்திலுமே பெரிதாய் பலன் தந்ததில்லை.உண்மை நிலை இப்படியிருக்க இந்த கலிகாலத்தில் தம் முதுகு நிறைய அழுக்கை வைத்திருக்கும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி தெலுங்கானா விசயத்தில் திருவாய் மலர்ந்தருளி வாங்கிக்கட்டிக்கொண்டுவிட்டார்.

" நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்"
"ஆப்பசைத்த குரங்கு"
"வாயை கொடுத்து .... ஐ புண்ணாக்கிக்கொள்ளுதல்"

எதிர்காலத்தில் மேற்படி சொலவடைகள்,பழமொழிகளையெல்லாம் கஷ்டப்பட்டு சொல்ல தேவையில்லை. தெலுங்கானா விசயத்துல சங்கராச்சாரி மாதிரி என்று சிம்பிளாக சொல்லலாம்.

அட கருத்தை சொன்னதோடு நிறுத்திக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை. ஏதோ அவசர குடுக்கை என்று விட்டிருக்கலாம். தம் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பை கண்டு உடனே யு டர்ன் அடித்து அந்தர் பல்டியில் அரசியல் வாதிகளையே தோற்கடித்துவிட்டார் சங்கராச்சாரியார்.

முதல் கருத்து:
வென்யூ: ஆந்திர மானிலம் குண்டூர்
தனி தெலுங்கானா வந்தால் நக்சல் பிரச்சினை வரும். இதர மதங்களின் பிராபல்யம் பெருகும். உலகத்தையே குடும்பமாய் கருதுவதே நம் கலாச்சாரம்.தனிதெலுங்கானா கோருவது நம் மதம்,கலாச்சாரத்துக்கு விரோதம்

எதிர்ப்பு அலை:
ஏற்கெனவே தெலுங்கானா வாதிகள் நவத்வாரத்திலும் புகையுடன் இருக்க ஜெ.சரஸ்வதியின் கருத்து பெட்ரோல் ஊற்றியது போலாகிவிட சங்கராச்சாரியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி "சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்" என்று சொல்லிவிட்டனர்.மடத்தில் நடை பெற்ற கொலை ( சங்கர்ராமன்) , தலை மறைவு (அதாருங்க டக்குனு ஞா வரமாட்டேங்குது) ,வங்கி மோசடி (இது ஆரோ ஒரு தாய்குலம்னு நினைக்கிறேன் .கரெக்டா?) எல்லாவற்றையும் தூக்கி வீசினர்.

சங்கராச்சாரி குடுமி ஆட காரணம்:
ஏற்கெனவே ஒரு பதிவில் விவரித்ததை போல ஸ்வாமிகள் மடம் சார்பில் திருப்பதியில் மெடிக்கல் காலேஜ் கட்ட இருக்கிறார். சமக்யவாதிகளின் பிராபல்யம் உள்ள திருப்பதியில் தலைவர்களை லைனில் வைக்க மேற்படி கருத்தை அள்ளித் தெளித்துவிட்டார் போலும். தெலுங்கானா வாதிகள் ரவுண்டு கட்டி சவுண்ட் விட அந்தர் பல்டி அடித்து விட்டார்.

யு டர்ன்:
வென்யூ: குண்டூர்
" நான் தெலுங்கானா கூடாதுன்னு சொல்லல. தலைவர்கள் ஹைதராபாத்ல இருக்க கூடாது .கிராமத்துக்கு போகனும். மாணவர்களை போராட்டத்துல இழுக்க கூடாதுனு தான் சொன்னேன்"

அந்த காலத்துலயே:
ராமாயண காலத்தை ஆகா ஓகோனு புராணங்கள் சொல்லுது.அன்னைக்கே இந்த சாமியார்களால ஒரு காசுக்கும் உபயோகமில்லேனு தெரியுது. தசரதன் தலை வார்ரப்ப தலைல ஒரு வெள்ளை முடிய பார்க்கிறார்.பார்த்ததுமே "அடடா நமக்கு வயசாயிருச்சு. ராமனுக்கு முடி சூட்டிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணி அரசவை கருத்தை கேட்கிறார். வசிஷ்டர் தான் ராஜ குரு. "பேஷா பண்ணலாமே"ன்னு சொல்லிர்ரார்.அப்புறம் நடந்ததுதான் தெரியுமே. ராமன் காட்டுக்கு போகவேண்டியதாயிருச்சு.

தசரதன் இந்த ப்ரபோசலை சொன்னதுமே " த பாருப்பா .. நீ கைகேயிக்கு குடுத்த ரெண்டுவரத்தை அவள் கேட்க போறாள் . ராமன் காட்டுக்குதான் போகப்போறான். பரதன் தான் நாட்டை ஆளப்போறான்"னுவசிஷ்டர் முன் கூட்டியே சொல்லியிருக்கலாம்லியா !

இதை விடுங்க ராம் தேவ் பாபானு ஒரு பார்ட்டி. இவரு ஒரு யோகா குரு. இவர் தன்னோட ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைல மருந்து தயாரிப்புக்கு மிருக எலும்பு ,மனித எலும்பெல்லாம் உபயோக்கிறார்னு பெரிசா அகுடாகி ( புரளி கிளம்பினு அர்த்தம்) ஒரு மாதிரியா புழுதி அடங்கியது. இப்ப அவர் சொல்றார் " லஞ்சத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கனுமாம் இல்லேன்னா அவரோட ஆட்கள் அவர் இயக்கம் சார்பா தேர்தல்ல நிப்பாகளாம்.

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாங்கனு புலம்பாதிங்க. நம்ம ஜெயேந்திர சரஸ்வதியை விட பாபா பெட்டரில்லையா தேர்தல்ல நிக்கறேங்கறார். நம்ம பார்ட்டிக்கு அந்த தில்லு கூட இல்லியே.

நான் என்ன சொல்றேன்னா.. நீ சாமியாரோ இல்லியோ .. நல்லவனோ கெட்டவனோ உன்னையும் மதிச்சு நாலு ஐஏஎஸ்,ஐபிஎஸ், எம்,எல்,ஏ, எம்பி, மந்திரி, வராங்கல்ல அவியளுக்கு நல்லது கெட்டது சொல்லி அவிக மூலமா மக்களுக்கு நாலு நல்ல காரியம் நடக்கறாப்ல பண்றத விட்டுட்டு அரசியல்வாதி கணக்கா ஏன் ஸ்டேட்மென்ட் கொடுப்பானேன் ,பல்டி அடிப்பானேன்.

நினப்புதானே பொழப்பகெடுக்குது. சங்கராச்சாரிக்கு என் அட்வைஸ்
1.முதல்ல மடத்து சொத்து கணக்கை வெளியிடுங்க ( மடத்துக்கான வெப்சைட்லயே வைக்கலாம்)

2.மேற்படி சொத்துக்களையெல்லாம் (மக்களுக்கு பயனின்றி உள்ள ) விற்று தொலைத்து மத்திய அரசின் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீமில் இன்வெஸ்ட் செய்யுங்கள். வரும் வட்டியில் எம்.ஜி.ஆர் வேலைகள் செய்யலாம். முதலீட்டுக்கும் உரிய வட்டி கிடைத்து கொண்டே இருக்கும். நிர்வாகத்தை உலக அளவில் புகழ் பெற்ற மாசு மருவற்ற சேவை நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டு ஒழுங்கு மரியாதையாக ஒரு மடாதிபதியின் கடமைகளை மட்டும் ஆற்றுங்கள்

3.இந்து மதம் என்றால் விக்கிரக ஆராதனையும், சுய நல அரசியல் பிசாசுகள் செய்யும் யாகங்களும் தான் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. இதை மாற்ற இந்துமத சாரத்தை, யோக ரகசியங்களை வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்யுங்கள்


4. இன்னும் மனமிருந்தால் கலவைக்கு போன சந்தர்பம், சங்கர்ராமன் கொலை, எவளோ அப்ஸ்காண்டட் ஆன கதை இத்யாதியில் "உண்மையில் நடந்ததென்ன" என்று வாக்கு மூலம் தந்து மக்களிடம் மன்னிப்பு கோருங்கள்

அதை விடுத்து வேலியோரம் போறதையெல்லாம் எடுத்து காதில் விட்டுக்கொண்டு ஏனய்யா நாளிதழின் பக்கங்களை வீணாக்குகிறீர்.