Friday, September 18, 2009

ஆஞ்சனேயரும் ஏசு நாதரும்


ஜோதிடம் உண்மை. ஜோதிடம் என்பதும் ஒரு விஞ்ஞானமே. ஜோதிடர்கள் கூட (முக்காலே மூணூ வீசம்) தாங்கள் சொன்னது நடக்க வேண்டுமே என்ற அக்கறையில் கணக்கு போட்டுத்தான் சொல்கிறார்கள் ஆனாலும் சில நேரம் ஜோதிடம் பொய்க்கிறது. இதற்கு என்ன காரணம்.

எங்கள் சி.எம்.ஒய்.எஸ்.ஆர் கடப்பாவில் பிறந்தவர்.கடப்பா என்றாலே வெடிகுண்டு தான் நினைவுக்கு வரும், அவரது தந்தை ராஜா ரெட்டி ஒரு ஃபேக்ஷன் லீடர். அவர் மீது பல வழக்குகள் இருந்தது. ஒய்.எஸ் .ஆரும் உத்தமர் அல்ல. ஒரு கட்டத்தில் காங்கிரசிலிருந்து பிரிந்து ரெட்டி காங்கிரஸ் ஏற்பட்ட போது இவர் ரெட்டி காங்கிரசில் இருந்தார். அப்போது இந்திரா கடப்பா வந்தபோது அவர் ஓய்வெடுக்க விருந்த கஸ்ட் ஹவுசை முற்றுக்கையிட்டு விட இந்திரா அம்மையார் குறைந்த பட்சம் பூத்தா போயிட்டு புடவை கூட மாத்திக்க முடியாம ஓட வேண்டி வந்தது. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படிப்பட்ட கடந்த காலம் கொண்ட ஆசாமி மானிலமெங்கும் பாத யாத்திரை செய்தார்.மக்களில் 70 சதம் பேர் விவசாயத்தின் மேல் டெப்பென்ட் ஆகியிருப்பதையும், பாசன நீர் பற்றாக்குறை காரணமாய் அவதிபடுவதையும் கண்ணார கண்டார். அப்போது அறிவித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கான மின் கட்டண பாக்கியை ரத்து செய்வோம் இலவச மின்சாரம் தருவோம், லட்சம் கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டி கோடி ஏக்கர் நிலத்துக்கு பாசன நீர் தருவோம் .

ஒரே வருடத்தில் காலம் மாறியது.காட்சி மாறியது. அவரே சி.எம்.ஆனார். தேர்தல் கால வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதுதானே சரித்திரம். ஆனல் அவரோ கொடுத்த வாக்கை நிறைவேற்ற முழுமூச்சாய் பாடுபட்டார். தேர்தல் அறிக்கையில் சொன்னது (பெண்களுக்கு நூற்றுக்கு நாலணா வட்டியில் கடன் முதலானவை)சொல்லாதது(இரண்டு ரூபாய்க்கே கிலோ அரிசி, ஆரோக்கிய ஸ்ரீ முதலானவை)அனைத்தையும் நிறைவேற்றினார். அவரது நலதிட்டங்களை பட்டியலிட்டால் அதுவே ஒரு தனிப்பதிவாகிவிடும். முதல் டெர்மில் தான் அமல் படுத்திய வளர்ச்சி, நல திட்டங்களை மட்டும் நம்பி தேர்தலுக்கு போனார். புதிய வாக்குறுதிகள் இல்லை.எந்த கட்சியுடனும் கூட்டு இல்லை. இதர தலைவர்கள் பிரச்சாரம் கூட செய்யவில்லை. ஒண்டிக்கு ஒண்டி மோதினார். ஒரு புறம் சிரஞ்சீவி,அவருக்கு இருந்த சினிமா கவர்ச்சி, மறுபுறம் சந்திரபாபுவுடன் அனைத்து எதிர்கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டாலும், ஈனாடு, ஆந்திர ஜோதி என்ற இரண்டு மேஜர் நாளிதழ்கள் ஒரு தலை பட்ச துஷ் ப்ரச்சாரம் அனைத்தையும் மீறி ஜெயித்தார்.

இத்தனைக்கும் மானிலத்திலேயே என் ஒருவனை தவிர எந்த ஜோதிடரும் ஒய்.எஸ்.ஆர் முதல்வராவார் என்று கூறவே இல்லை. நான் கூட சிரஞ்சீவி ஜாதகத்தில் உள்ள அதே அவயோகங்கள் சிஎம் ஜாதகத்திலும் உண்டு. ஆனால் அவை வெடித்து போன குண்டு என்று வியாக்யானம் செய்தது நினைவுக்கு வருகிறது.


ஒரே விதமான தோஷங்கள் உள்ள இருவர் தலைமையில் இரண்டு கட்சிகள் மோதின.அப்போது (கடந்த தேர்தலின் போது) ஒய்.எஸ் ஜாதகத்தில் தோஷத்தை தந்து கொண்டிருந்த கிரகங்க‌ள் வேலை செய்யவில்லை.ஆனால் இப்போது சொல்கிறேன். தோஷம் தரும் கிரகங்கள் எத்தனை முறை நஷ்டம் விளைவித்தாலும் மீண்டும் மீண்டும் நஷ்டம் தந்து கொண்டேதான் இருக்கும். சிரஞ்சீவி தேர்தலில் தோற்றார். அவர் கட்சி மட்டுமல்ல அவரும் ஒரு தொகுதியில் தோற்றுப்போனார். ஆனால் இன்று அவர் கட்சி கடலில் விழுந்த உப்பு பொம்மை போல் கரைந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் (டெக்கலி) பிரஜா ராஜ்ஜியத்துக்கு டெப்பாசிட் காலி.

ஆக இந்த சம்பவங்களுக்கு ஜோதிடனாக நான் தரும் விளக்கம் என்னவென்றால் சிரஞ்சீவி ஆஞ்சனேயர் பக்தர். ஆஞ்சனேயர் சஞ்ஜீவினி வேர் கொண்டு வந்து ராம லட்சுமணர்கள் உயிரை காத்தவர் அல்லவா. பழக்க தோஷத்தில் சிரஞ்சீவியை தேர்தலில் தோற்க செய்து உயிரை காப்பாற்றிவிட்டார்.

வை.எஸ்.ஆர் கிறிஸ்தவர். கிறிஸ்துவை நம்பி வணங்கியவர். ஏசு எப்படி தம் மக்களுக்காக தம் உயிரை அர்ப்பணீத்தாரோ அப்படி தமது பக்தரையும் உயிர் தியாகம் செய்து பெரும்புகழ் பெறச்ச்ய்துவிட்டார்.சிரஞ்சீவி ஜாதகத்திலான தோஷம் தரும் கிரகங்கள் மட்டும் வேலை செய்தன. அதை நான் வெடிக்காத குண்டு வெடிச்சுருச்சு என்று வியாக்யானம் செய்தேன்.