Monday, September 7, 2009

பன்றி யானைக்குட்டியை ஈன்றது


முன்னுரை:

வீரபிரம்மேந்திர ஸ்வாமி
ஆந்திர மானிலம் கம்மம் மாவட்டம், நேல கொண்ட பல்லி மண்டலம், போதுல பண்டா கிராமத்தில் பன்றி ஒன்று யானைக்குட்டியை ஈன்றது. இதிலென்ன கொள்ளை போகும் விஷயம் என்று புறம் தள்ளி விடாதீர்கள். உலக அழிவுக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது.

அடுத்த பாராவில் நான் விவரித்துள்ள வீரபிரம்மேந்திரஸ்வாமி உலக எதிர்காலம் குறித்து தான் எழுதியுள்ள காலஞானம் என்ற நூலில் கி.பி.1900 முதல் கி.பி.2008 மார்ச்சுக்குள் உலகம் அழிந்து ஏழில் ஒரு பாகம்தான் நிலைக்கும் என்று எழுதியுள்ளதாக டி கோட் செய்யப்பட்டுள்ளது.

அவர் எழுதியுள்ள ஒவ்வோரம்சமும் தவறாது நடைபெற்றுவருகிறது. ஆனால் அவர் கூறும் கால அளவை டி கோட் செய்வதில் சிக்கல் இருக்கிறது. காரணம் அவர் கூறும் வருடங்களின் பெயர்கள் 60 வருடத்துக்கொருமுறை ரீ சைக்கிள் ஆகும் தமிழ் ஆண்டு பெயர்களாகும்.

தமது காலஞானத்தில் உலக அழிவுக்கு அறிகுறியாக குறிப்பிடும் பல அம்சங்களில் பன்றி வயிற்றில் யானை பிறக்கும் என்பதும் ஒன்றாகும்.

மேற்சொன்ன செய்தி போட்டோவுடன் தெலுங்கு தினசரிகளில் வெளியானது. தெலுங்கு டி.வி.சேனல்கள் வீடியோவாகவும் காட்டியுள்ளன. எதுக்குனா நல்லது கீழ் வரும் விவரங்களை ஒரு மூச்சு படித்து விடுங்கள் .

எதற்குமே முடிவு என்று ஒன்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் போர் (Bore) தான். நமக்குத் தெரிந்த இந்த உண்மை இறைவனுக்கு தெரியாதா என்ன? அதனால் தான் பிரளயம் என்று ஒன்றை நிர்ணயித்து வைத்துள்ளான்.
பிரளயம் பற்றி எத்தனையோ யூகங்கள் விஞ்ஞானிகளிடையில் உள்ளது. சூரியனில் அணுப்புயல் உருவாகி எரிந்து போவோம்,துருவங்களில் உள்ள உருகி மூழ்கி சாவோம் இப்படி எத்தனையோ ஆப்ஷன்ஸ்.

மாறுதலுக்கு மேற்சொன்ன பிரம்மங்காரு என்ற ஆன்ம (விஞ்)ஞானி ஒருவரின் கருத்தையும் இங்கு பார்ப்போம்.
இவர் சொன்னபடி பிரளயம் வருகிறதோ இல்லையோ அதை நிர்ணயிக்குமத்தனை ஞானம் எனக்கு கிடையாது.
இவர் எத்தனையோ நல்ல விஷயங்கள் பற்றி கூறியுள்ளார். அவற்றை பின்பற்றுவோம்.
அப்படியே பிரளயம் வருவதற்கு முன்பே நம் சில்லரை தகராறுகளுக்கு மங்களம் பாடி, போர்களுக்கு, சூடோ புரட்சிகளுக்கு விடை கொடுத்து குறுகிய காலத்திற்காவது ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வோம் என்ற சிந்தனையை கொடுத்தது இவர் தான். அந்த சிந்தனையின் தொடர்ச்சியே இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம்

பிரம்மங்காரு என்றால் ஆந்திரத்தில் தெரியாதவர்கள் கிடையாது. இவர் கி.பி.1900 முதல் கி.பி 2008 வரை உலகத்தில் நடக்கக் கூடிய சம்பவங்களை பனை ஓலை சுவடிகளில் கால ஞானம் என்றபெயரில் எழுதி வைத்துள்ளார். இன்றைக்கு 491 வருடங்களுக்கு முன்பு பிறந்த பிரம்மங்காரு எழுதிய எதிர்கால சம்பவங்கள் அனைத்தும் யதார்த்ததிலும் நடந்து வருகின்றன.

அந்த காலத்திலேயே பெண்ணடிமை,ஜாதி மத பேதங்கள்,பிராமணர்களின் சாதி செருக்கு, போன்றவற்றிற்கு எதிராய் போராடியவர். ஒரு முகமதியனை சீடனாக ஏற்று " பிரம்மத்துக்கு மிஞ்சிய குருவில்லை ஸித்தய்யாவை (முகமதிய சீடர்) மிஞ்சிய சீடனில்லை என்ற சொலவடைக்கே காரணமானர்.
காலஞானத்தின் சாரம் :

கி.பி.1900-முதல் 2008 க்குள் (இது பெரும்பாலோரின் விளக்கம் மட்டுமே. ஒரிஜினலை நான் பார்த்ததில்லை) உலகத்தின் 7-இல் 6 பாகம் அழிந்து, ஒரு பாகம் மட்டுமே மிஞ்சும் என்பது காலஞானத்தின் சாரம் . அவர் தன் கணிப்புகளை தமிழ்/தெலுங்கு வருடங்களின் அடிப்படையில் எழுதியுள்ளதால் 2008-இல் வரக்கூடிய உகாதிக்குள் இது நிகழ்ந்திருக்க வேண்டும் . ஆனால் நிகழவில்லை. இது நம் விரிவுரையாளர்களின் தவறாகத்தான் இருக்கும்

என் கருத்து:

வெறும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே இது போன்ற கணிப்புகளை கூற முடியும். ஜோதிடத்தில் வெறும் 1 சதவீதம் கூட அறியாத நானே கடக சனியால் சுனாமி ஏற்படும் என்று கணித்து துண்டு பிரசுரம் வெளியிட்டேன். (சுனாமி என்ற வார்த்தை எனக்கு அப்போது தெரியாததால் கடற்கரையில் வாழும் மக்கள் வரலாறு காணாத பாதிப்புக்குள்ளாவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்)

ஈதிப்படியிருக்க மாபெரும் யோகியான பிரம்மங்காரு எதிர்கால சம்பவங்களை, மனிதர்களின் பெயர்கள் உட்பட எழுதிவைத்ததில் ஆச்சரியமே கிடையாது.

பிரம்மங்காரு பற்றி நான் படித்த, கேள்விப் பட்ட விஷயங்களை வைத்தே நான் இந்த வலைப் பூவை எழுதவில்லை . அவரது மூல மந்திரத்தை ஜெபித்தவன் நம் வீட்டு தாத்தா நமக்கு எச்சரிக்கைகள் கொடுப்பது போல அவர் ஆன்ம உரு்வில் எத்தனையோ முறை குறுக்கிட்டிருக்கிறார். அதையெல்லாம் இங்கே எழுதினால் தமிழ் ஓவியா போன்றவர்கள் என்னை காய்ச்ச , நான் பதிலடி கொடுக்க குழாயடி சண்டையாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.