ராஜ பக்சே திருமலை வந்து தர்ஜாவாய் கோவிந்தனை தரிசித்து பந்தாவாய் போனதை வைத்து கருப்புச்சட்டைக்காரர்களும், தமிழுணர்வு மிக்கோரும் மனம் நொந்து நிறையவே எழுதினர்.
ஏழுமலையானுக்கு கண் தெரியாது, காது கேட்காது இத்யாதி ரேஞ்சில் கூட எழுதினர். பாவம் அவர்களுக்கு தெரியாது. இதுவும் ஒரு வகை ஸ்துதியே. இதை நிந்தா ஸ்துதி என்பார்கள். வஞ்சப்புகழ்ச்சிக்கு எதிர்பதம். வஞ்சப்புகழ்ச்சியில் புகழ்வது போல் புகழ்வார்கள். நிந்தா ஸ்துதியில் இகழ்வது போல் புகழ்வார்கள்.
அவர்களுக்கு பாவம் எங்கள் ஏடு கொண்டலவாடுவின் சைக்காலஜி தெரியாது.ஈஸ்வர் ஏக் என்றார் ஷிர்டி பாபா. இறைவனின் திரு நாமங்களில் "மாக்கிர்" என்பதையும் ஒன்றாக குறிப்பிடுகிறது இஸ்லாம். இதற்கு சதிகாரன் என்று பொருள். ஏடு கொண்டலவாடு & துலுக்க நாச்சியார் கதை தெரியுமல்லவா ? சகவாச தோசத்தால் மாக்கிர் என்ற பெயரையும் உரிமையாக்கிக்கொள்ளவோ என்னமோ தெரியாது. ஏடு கொண்டலவாடுவின் ரூட்டே செப்பரேட்.பக்சேவ தன் எதிரில் நிற்க வைத்து ச்சும்மா அப்டி ஒரு லுக் விட்டாப்ல இருக்கு. இலங்கைல பக்சே வுக்கு பொன்சேகாவுக்கும் தகராறு. கொத்தபயாவுக்கும், சேகாவுக்கும் தகராறு. பொன் சேகா அப்ரூவரா மாறப்போறாருனு செய்தி. அமெரிக்கா க்ரீன் கார்டை அமுக்கி வச்சு அழுத்தம் கொடுக்கிறதா சேதி. இப்போ சேகா ராஜினாமா. குவார்ட்டர்ஸை காலி பண்ணிட்டு வீடு பார்த்துக்கிட்டிருக்கார். போக போக பாருங்க.மேலுக்கு தான் சாஃப்டு. உங்க அழகிரிய விட மோசமான கேரக்டரு எங்காளுது. ராவணன் கதை தெரியுமா? நவகிரகங்களை குப்புறப்போட்டு முதுகை மிதிச்சிக்கிட்டுதான் அரியணை ஏறி உட்காருவானாம். ஒரு நாள் நாரதர் பேச்சை கேட்டு மல்லாத்தி வச்சு ஏறினான். என்னாச்சு ? சனி பகவான் சும்மா அப்படி பார்த்தார். பல்ப் மாட்டிக்கிச்சு அதே இழவுதான் பக்சே கதியும். (பாருங்க கதையும்னு அடிக்கப்போனா கதியும்னு டைப்பாகுது)
ஏற்கெனவே ஒரு பதிவில் பக்சே நாற்காலியிலிருந்து தவறி விழுந்தார் இது அவருக்கு ஆப்பு வருவதற்கான அறிகுறி என்று எழுதியிருந்தது ஞா இருக்கிறதா?
இந்த சமாசாரத்தை ப்ளாக் விட்ஜெட் பகுதியில் வச்சிருந்தேன் ஆரும் கண்டுக்கிடலை அதான் பதிவாவே போட்டுட்டன் . ஹி ஹி
பலான ஜோக்குகள் சரிதானா ?
மனசாட்சியுடன் ஒரு விவாதம்
மனசாட்சியுடன் ஒரு விவாதம்
மனசாட்சி: இன்னாபா ஏதோ இந்தியாவ பணக்கார நாடா ஆக்கிட்டுதான் மறுவேலைன்னே ..இப்ப பார்த்தா பலான ஜோக்காவே இருக்கு
முருகேசன்: மிஸ்டர்.ம.சா ! உனக்கு உலகம் போற போக்கே புரியலே. நான் வெறுமனே 10 கோடி இளைஞர்களை கொண்டு நதிகளை இணைப்போம்னு சொல்லிக்கிட்டே இருந்திருந்தா 2006 டு 2009 மே கதை தான் நடந்திருக்கும். தெரியும்ல.. மொத்தமே 2006 பேர்தான் பார்த்திருந்தாக
ம.சா: அப்போ பேப்பர் காரன் சர்குலேஷனுக்குஅடிமை நீ ஹிட்ஸுக்கு அடிமை அப்படிதானே
முருகேசன்: தோ பார் ம.சா.. நான் வித்யாசமா யோசிக்கிறவன். பேப்பர்காரனுக்கு வெறும் சர்க்குலேஷன் தான் லட்சியமே. ஆனா நமக்கு லட்சியம் நிறைவேற ஹிட்ஸும் முக்கியம் தட்ஸ் ஆல்
ம.சா: இன்னாவோபா நீ போற போக்கே சரியில்ல. ஆப்பரேஷன் இந்தியாவுக்கு மங்களம் பாடிட்டியா என்ன தெரியல
முருகேசன்: நீ சும்மா எதிர்கட்சி மாதிரி வெறுப்பேத்தாத. நான் தனி ஒரு ஆசாமி என்னால என்ன செய்ய முடியுமோ அதைதான் செய்ய முடியும்
ம.சா: த பார்ரா அப்போ பந்தாவா ஒன்லி ஒன் வூ கமிட்டட் டு மேக் இண்டியா ரிச்னு போட்டுக்கிட்டப்ப தெரியலையா நீ சிங்கிள்னு
முருகேசன்: அப்ப ஏதோ சாமியெல்லாம் துணையா இருக்குனு நினைச்சேன்
ம.சா: இப்ப மாத்திரம் என்ன ? சாமியெல்லாம் கொடைக்கானலா போயிருச்சு
முருகேசன்: இல்லப்பா வேற ஒரு பார்ட்டி அம்மனோட சத நாமாவளி பாக்கெட் புக் போட பணம் கொடுக்க நான் அதை ரெகுலர் இஷ்யூஸுக்கு திருப்பி விட்டுட்டன். செப்டம்பர் 26 லருந்து நவம்பர் 26 வரை நமக்கு ஆத்தாளுக்கு டெர்ம்ஸ் சரியில்லே
ம.சா: அப்போ நாளைக்கு டைரக்ட் எலக்ஷன்ல உன்னை ஜனாதிபதியா தேர்ந்தெடுத்தபிறகு படக்குனு ஒரு நாள் இப்படி ஆத்தாளுக்கும் எனக்கு டெர்ம்ஸ் சரியில்லெனு கை தூக்கிருவியா
முருகேசன்: என்ன நீ இப்படி மடக்குறே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மக்கள் என் பக்கம் இருந்தா ஆத்தாளுக்கெல்லாம் பயப்படமாட்டேன் தெரியுமில்லே. கங்கையம்மன் திருவிழால ட்ரெயினேஜ் முழுக்க கூழோடறதை தடுக்க கூழ் ஊத்தறத தடை செய்து நொய், கேழ்வரகு மாவு கலெக்ட் பண்ணி பாக்கெட் போட்டு கொடுக்க திட்டம் போட்டவன் நான்
ம.சா: உனக்கு சாமி முக்கியமா ஆசாமி முக்கியமா ?






